காணாமல் போனோர் தொடர்பாக நிரந்தர அலுவலக சட்டம்!

Friday, April 1st, 2016
காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகத்துக்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் இது எதிர்வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் நிறைவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிரந்தர அலுவலகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் போரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பல் செயலணி ஒன்றை அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: