யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு!

Wednesday, May 12th, 2021

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தின் 51-ஆவது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில் இராணுவத்தின் 512 வது பிரிகேட் படைப்பிரிவினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகரில் பொது மக்கள் அதிகமாக ஒன்று கூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் தொற்று பரலை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து இடங்களிலும் இராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: