முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, March 18th, 2019

முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்று அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: