கொவிட் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள செய்தி!

Sunday, August 1st, 2021

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றையதினத்தில் மாத்திரம் 3 இலட்சத்து 6 ஆயிரத்த 507 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 20 ஆயிரத்து 100 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14 ஆயிரத்து 503 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை 2 இலட்சத்து ஆயிரத்து 495 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 7 இலட்சத்து 13 ஆயிரத்து 659 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: