பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு!

Thursday, August 24th, 2017

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக அமைச்சர் கூறினார். இத்தகைய 876 ரயில் கடவைகளுக்காக பெல் அன்ட் லைட் சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளன. இந்தப் பணி ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார்.

Related posts: