போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன – தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் !

Thursday, August 31st, 2023

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பணி புறக்கணிப்பு மற்றும் ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளை காரணமாகவும் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், தொடருந்து சேவையாளர்களுக்கு முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது, விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தவிடயங்களை ஆராய்ந்த போக்குவரத்து அமைச்சர், சேவையாளர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைளை எடுப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: