திருமலை மாவட்டத்தில் பரவிய டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்குள்!

Monday, March 27th, 2017

திருகோணமலை மாவட்டத்தில் 7 சுகாதார சேவைப் பிரிவுகளில் பரவிய டெங்கு நோய் தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நிலைமை மேலும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 கடந்த 22ம் திகதி முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இந்த 7 பிரிவுளிலும் 2923 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆகும். இருப்பினும், கடந்த 2 தினங்களில் திருகோணமலை பெரியாஸ்பத்திரி, கிண்ணியா ஆதார வைத்தியசாலை மற்றும் மூதூர் மாவட்ட வைத்தியசாலைகளில் குறைந்த எண்ணிக்கையான நோயாளர்களே அனுமதிக்கப்பட்டனர்.

திருகோணமலை மாநகரசபை எல்லைப்பகுதிக்குள் நாளாந்தம் 650 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகி;ன்றன. புகைவிசுறல் நடவடிக்கை தொடர்ந்தும்  இடம்பெறுகிறது. கிண்ணியா பிரதேச சுகாதார சேவை எல்லைப்பகுதிக்குள்  ஒவ்வொரு நாளும் 700 முதல் ஆயிரம் வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தபப்டுகின்றன. நாளாந்தம் 220 கிணறுகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கிண்ணியா பிரதேசத்தில் கிணறு மற்றும் குழாய்க்கிணறுகளுக்கு அருகாமையில் குடம்பிகளின் பெருக்கம் காணப்படுகின்றது.

பிரதேசத்தில் 4 ஆயிரம் கிணறுகள் உள்ளன. இந்த அனைத்து கிணறுகளும் சுத்தம் செய்தபின்னர் வலைகளை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீடுகளை  சுத்தமாக வைத்திருப்பதற்காக பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுஎன்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: