யாழ்ப்பாணம் -காரைநகர் இடையே விரைவு தபால் சேவை ஆரம்பம்

Sunday, May 21st, 2017

யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையேயான விரைவுத் தபால் சேவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபாலக வாகனம் மூலம் இந்தத் தபால் சேவை தினமும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண தலைமை தபாலகத்துக்கும் சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், அளவெட்டி, பண்டதரிப்பு, காரைநகர் ஆகிய தபாலகங்களுக்கும் இடையே இந்தத் தபால் சேவை தினமும் துரித கதியில் இடம்பெறும்

குறித்த தபாலகங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் யாவும் இந்த வாகனம் மூலம் காரைநகருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே தினமும் துரிதமாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைத் தபாலகம் தெரிவித்தது

இதற்;கு முன்னர் காரைநகருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான தபால் சேவைகள் யாவும் இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து மூலமே இடம்பெற்றன.

Related posts:


இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்...
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...
சவால்கள் வருகின்றன - அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ த...