எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் இருந்ததில்லை – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/12/download-1-30.jpg)
இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச ரெிவித்துள்ளார்.
கடன் செலுத்துகைக்காக சீனா இவ்வாறு கடனுதவி வழங்குவதாகவும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிட்ச் ரேடிங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் ஓர் எதிர்வு கூறலே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கை கடன் செலுத்துகையில் சிரமங்களை எதிர்நோக்கும் என பிட்ச் ரேடிங் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் விட்டதில்லை எனவும் அமைச்சர் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!
நேற்றும் புதிய நோய்த்தொற்று இல்லை: கொரோனா தொடர்பில் இலங்கையின் நிலை!
நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் - நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவ...
|
|