உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/election-720x480.jpg)
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்.
இதனால், எந்த முறையில் தேர்தல் நடத்தப்படும் என்பது தமக்கு தெரியாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். இதனடிப்படையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது, எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க...
மருந்துகளின் விலை அதிகரிப்பு - விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - இந்திய மக்களின் மருத்துவ அன்ப...
|
|