இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர் !

Monday, December 21st, 2020

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1605 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் 13,896 கிலோகிராம் கஞ்சாவும், 802 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: