நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் – பருவபெயர்ச்சி மழையே காரணம் என இந்த த ஹிந்து நாளிதழ் தகவல்!
Friday, October 20th, 2023இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் பருவபெயர்ச்சி மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்பதாக குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் போதிய முன்பதிவு இன்மையால், இந்த கப்பல் சேவையை வாராந்தம் 3 தினங்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பருவ பெயர்ச்சி மழை காரணமாக குறித்த கப்பல் சேவையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது
000
Related posts:
மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் தெரிவிப்பு!
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த அனுமதி - மோட்டார் வாகன திணைக்களம் தெரிவி...
|
|
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
யாழில் மீண்டும் கொரோனா அபாயம் - தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வா...
இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா - 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் ந...