சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

Monday, December 20th, 2021

இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும், நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குனறிப்பிடத்தக்கது.

Related posts:


டெங்கு' நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் - தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சு...
சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் - இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
சோளச் செய்கையில் இனங்காணப்படாத நோய்த்தாக்ம் - விவசாயத்திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர...