இரு மாத காலப்பகுதியில் நீரில் மூழ்கி 93 பேர் பலி!

Tuesday, April 17th, 2018

நாட்டில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் நீரில் மூழ்கி 93 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக காவற்துறையினரின் தகவல்படி தெரியவந்துள்ளது.

கடந்த நாட்களில் சுற்றுலா பயணங்கள் செல்கின்றவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராட முனைந்தவர்களால் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன.

கடந்த எட்டாம் திகதி கண்டி ௲ பன்வில பகுதியில் தளுஓய களுபாலத்துக்கு அருகில் நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அத்துடன் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி ஹினிதும – நுககலபகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: