இலங்கை வானில் இன்று இரவு 9.23க்கு சூப்பர் மூன் தோன்றும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/a42-750x506.jpg)
பௌர்ணமி தினமான இன்று இரவு வழமையை விட மிகப்பெரிய அளவில் சந்திரன் தோன்றவுள்ளது.
சூப்பர் மூன் என அழைக்கப்படும் இந்த சந்திரனை இன்று இரவு 9.23க்கு இலங்கை மக்கள் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் பூமியை அண்மித்து பயணிப்பதால் இவ்வாறு வழமையை விட பிரகாசமாக தோன்றவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்த சூப்பர் மூன் வழமையை விட 14 சதவீதம் பிரகாசமாகவும் 6 சதவீதத்தில் பெரிதாகவும் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் - பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை!
தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!
பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
|
|