இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று – அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சிறப்பு நிகழ்வுகள்!

Friday, February 4th, 2022

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் 74 ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.. சுதந்திர தின கொண்டாடத்தின் மரியாதை அணிவகுப்பில் முப்படையின் சுமார் 6,500 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

கொவிட்-19 பரவல் காரணமாக சுகாதார வழிமுறைகளுக்கு அமைய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன..

இதேவேளை, இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 480 இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள 8,034 பேரும் தரம் உயர்த்தப்படவுள்ளது.

அதேநேரம், 74 ஆவது சுதந்திரதின நிகழ்வினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபானசாலைகளையும் இன்றைய தினம் மூடிவைக்குமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில்  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

“சவால்களை முறியடிக்கும் நாளை” எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன், உத்தியோகத்தர்களுக்கு மர கன்றுகளும் வழங்கப்பட்டது

தொடர்ந்து மாவட்ட செயலக வளாதத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மதகுருமார்கள்,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக  ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: