யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிவைப்பு!

Friday, June 18th, 2021

யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரனமாக யாழ் நகரை சூழவுள்ள பகுதிகளில் யாசகம் பெறும் யாசகர்கள் உணவுக்காக கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்த நிலையிலேயே இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர்.

அத்தோடு நாளையதினமும் இவ்வாறு உணவுகளை வழங்கி வைப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு - இல...
இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - பிரதமர் தினேஸ் குணவர்தன இடையே சந்திப்பு - இரு தரப்பு உறவுகள்...