வவுனியாவில் உணவகம் ஒன்று தீக்கிரை!

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (20) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர சபையின் தீயணைப்பு பிரிவினரால், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் உணவகம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
உணவகத்தில் தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணைகளை மன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் கடல் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் நிதியுதவி!
மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னம...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
|
|