யாழில் சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
Wednesday, May 31st, 2017
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுபோக விவசாயச் செய்கையில் தற்போது விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ். வலிகாமத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம், மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் விவசாயிகளால் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!
9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி!
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது...
|
|