யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/6e723c3b-7148-4b28-8a00-b9d2cc87eb89.jpg)
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பலநாள் கலன் உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வி.எம். எஸ். எனப்படும் படகு கண்காணிப்பு கருவிகள், வானொலி தொடர்பாடல் கருவி போன்றவற்றை மீன் பிடிக் கலன்களுக்கு பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
|
|