குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!  

Wednesday, July 6th, 2016

மனித நேயத்தையும், சக மனித அன்பையும் உலக மக்களுக்கு உணர்த்துகின்ற புனிதமான நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புனித ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஈத் முபாரக்…….

முப்பது நாட்கள் நோன்பு இருந்து, வாழ்வின் யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்தும் நோன்புப் பெருநாளில் இல்லாதவருக்கு கொடுத்து உண்ணும் மனிதநேய உணர்வை இஸ்லாம் வளர்க்கின்றது.

எல்லா மதங்களும் சரியான வழியையே மனிதனுக்கு காட்டுகின்றன. மனிதன் தனது இயலாமைகளையும், குரோதங்களையும் கடந்து சக இனத்தவர்களையும், மாற்று மதத்தவர்களையும் அரவணைத்தும், அணுசரித்தும் வாழ வேண்டும்.

அப்போதுதான் இன ஐக்கியமும், சகோதரத்துவமும், தேசிய நல்லிணக்கமும் மனித வாழ்வை வளப்படுத்தும்.

எனவே சிறப்பான வாழ்வுக்கு சரியான மார்க்கத்தை உணர்த்தும் இஸ்லாத்தின் புனித நோன்புப் பெருநாளில் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், மனித நேயமும் பொங்கிப் பெருகட்டும்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்-...
பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் - டக்ளஸ் M....
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...