முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016

நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிறார்களைக் கல்வியின்பால் ஈர்க்கின்ற அதிமுக்கியத்துவம்வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்த முன்பள்ளி ஆசிரியைகள் பலர் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கெனப் போதுமானவளவு ஓர் ஊதியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுவது அவசியமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாகாண சபையின் நிர்வாகமற்ற சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடம...
துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ...