கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் படகுகளை பதிவு செய்வதில் காணப்படும் அசௌகரியங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் தொடர்பு கொண்டு, நாடடிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மீன்பிடிப் படகுகளை தயாரிப்பதில் காணப்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

Related posts:

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவான...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
சரியான வழிகாட்டியின் பக்கம் மக்களது பார்வை செல்லுமாக இருந்தால் நிச்சயம் அவர்களது அபிலாசைகள் வெற்றி க...