ஹெரோயினுடன் யாழ் நகரில் இளைஞன் கைது!

Saturday, January 11th, 2025

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

000

Related posts:


இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு - கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் - இந்திய ...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமை...