விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, October 21st, 2024

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெள்ளம் காரணமாக அதிக ஆபத்தில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: