முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம் – உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விசேட உரை!

Friday, February 28th, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.  

இந்த உரை புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்புடன் இன்று (28) நடைபெறுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவாகும்.  மார்ச் 2 ஆம் திகதி நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

000

Related posts:

போக்குவரத்துச் சட்டம் வடமராட்சியில் இறுக்கம் : மீறுவோர் மீது நடவடிக்கை என பொலிஸ் அத்தியகட்சர் எச்சர...
பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு - அமைச்சர் டலஸ் அழகப்பெர...
சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் - சுற்றுலாதுறை அம...