கரப்பந்தாட்டம் விளையாடிய குடும்பஸ்தர் மரணம்!

Monday, March 14th, 2016

திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மரணமடைந்து  சக விளையாட்டு வீரர்களால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பிரகாஸ் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (12) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த குறித்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயிலிருந்து இரத்தம் வடிந்துள்ளதாகவும்  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் அவர் காப்பாற்றப்படமுடியாது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: