பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI – பெற்றோருக்கு எச்சரிக்கை!
Wednesday, June 11th, 2025
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளர்களான மாணவிகள் கற்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் ஹொரணை பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலையின் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணையில் உள்ள பிரபலமான பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
000
Related posts:
நீதிபதி சொன்னார் முகத்தில் குத்தினேன்!
டெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி!
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - அமெரிக்...
|
|
|


