டெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்  – ஜனாதிபதி!

Sunday, June 25th, 2017

டெங்கு தொற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார் குப்பை கூளங்களை ஆங்காங்கே வீசுவதினாலேயே தற்போது டெங்கு தொற்று அதிகரித்துள்ளது

அதனைக் கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடனும் உணர்ந்தும் செயற்பட வேண்டுமே அன்றி சட்டத்தால் அனைத்தையும் செய்து விட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

Related posts: