வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!
Sunday, November 15th, 2020
வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பளை பொலிஸார் தெரிவித்தனர்
செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குணசிங்கம் (வயது -43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என பளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
வடக்கில் முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பம்!
ஜனாதிபதி எதையும் மறைக்கவில்லை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை வருகை!.
|
|