பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு !
Tuesday, December 24th, 2024
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வேலைத்திட்டத்திற்கென ஒரு மாணவனுக்கு தலா 110/- வீதம் கல்வி அமைச்சு வழங்க உள்ளது.
இது தேசிய பாடசாலைகள் அல்லாத மாகாணப் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இவ்வேலைத்திட்டமாகும்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கென முதலாம் தர மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளில் உள்ளெடுப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
000
Related posts:
மயிலிட்டி துறைமுகம் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானம்!
|
|
|


