நெடுந்தீவு குறிகாட்டுவான் தனியர் படகுச் சேவை நாளைமுதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் – சங்கத்தின் தலைவர்!
Monday, June 29th, 2026
…..
நெடுந்தீவு குறிகாடுவான் இடையேயான கடற்போக்குவரத்தின் தனியார் சேவைகள் நாளை 30 ஆம் திகதி முதல் 11:30 வழமைபோன்று இடம்பெறும் என தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச படகு சேவைகள் தடைப் பட்டிருந்த வேளையில் அரச படகு நேரசூசியில் தனியார் படகுகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இதன் காரணத்தினால் பகல் 11.30 சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இன்னிலையில் தற்போது அரச படகுகள் திருத்த வேலை முடிந்து தமது சேவையை ஆரம்பித்துள்ளதை அடுத்து தனியார் படகுகள் தமது வழமையன கால அட்டவணையில் சேவையை முன்னெடுக்க திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அழகு சாதன பொருட்களுக்கும் விரைவில் சட்டமூலம்!
நியூசிலாந்து தீயில் சிக்கி இலங்கையை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலங்கையின் கலாசார மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் - அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவி...
|
|
|


