நிர்வாகத்தில் குழப்பம் – இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – பயணிகள் பெரும் அசௌகரியம்!
Monday, December 2nd, 2024
நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து - சுகாதார அமைச்சு தகவல்!
அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி - வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம...
|
|
|


