நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களும் நவீன தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்ட புதிய வாகன இலக்க தகடுகள் வழங்கப்பட உள்ளதாகவு. தெரிவித்துள்ளது.
இதே நேரம் தற்போது சந்தையில் எண் பலகைகள் இன்றி பல வாகனங்கள் காணப்படுவதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, கடந்த 10 வருடங்களாக மோட்டார் வாகனத் திணைக்களம் மேம்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாகன இலக்கத் தகடுகள் இன்றி உள்ள வாகனங்களுக்கு அடுத்த வாரத்திலேயே தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வாய்மொழிமூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|