பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்

Saturday, February 4th, 2017

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மக்களும் தமது வகிபங்கை அவர்கள் வாழும் பகுதிகளின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்வது அவசியமாகும். அதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொது அமைப்புகளும் இளைஞர்களும் ஒன்றுபட்டு சமூகப்பற்றுடன் உழைக்க தயாராக வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் மண்டைதீவு பகுதியில் மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கலந்தகொண்ட மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளான வாழ்வாதாரபிரச்சினைகள், தொழில்வாய்ப்பின்மை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட  வி.கே. ஜெகன் தலைமையிலான பிரதிநிதிகள் குறித்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களத கவனத்திற்கு கொண்டசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்

இச்சந்திப்பின் போபோது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர்  ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

2

Related posts: