டியாகோ கார்சியா தீவிலிருந்த இலங்கை தமிழருக்கு இங்கிலாந்தில் தங்க 06 மாதங்கள் அனுமதி!

Wednesday, December 4th, 2024

இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கையர் குழுவொன்று, இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 குழந்தைகள் உட்பட 60 பேரடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே, இவ்வாறு இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகளின்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர், அந்நாட்டில் 6 மாத காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவிலிருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

000

Related posts:

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொலைக்காட்சி, அலைபேசி என்ற இரு சாத்தான்கனையும் வீடுகளில் ஒழ...
சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள்...
எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்...