ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025

ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 1,382 பேர், கம்பஹா மாவட்டத்தில் 764 பேர்,  காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

000

Related posts: