கடன் மறுசீரமைப்பு ஒப்புதலையடுத்து முதலாவது நிதித்தொகை இலங்கைக்கு கிடைக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
Wednesday, September 21st, 2022இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கிறது.
அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களின் ஒப்புதல் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.
இது சர்வதேச நாணய நிதியதிடம் இருந்து இலங்கை உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக உள்ளது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
71 புலிகளை விடுவிக்க முடியாது – நீதியமைச்சர்!
மக்கள் அசண்டையீனம் - மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச...
பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி – ரஷ்யாவில் அதிரடி நடவடிக்கை!
|
|
|
கடலில் மூழ்கும் நிலையில், 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு - இலங்கை கடற்படை அறிவிப்பு!
அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழ...
அனைத்து மாவட்டங்களினதும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணைய...


