சீனாவில் நிலச்சரிவில் – 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி !
Sunday, February 9th, 2025
சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
“காணாமல் போனவர்களைத் தேடி மீட்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும், அதன் பின்விளைவுகளை முறையாகக் கையாளவும் முடிந்த அனைத்தையும் செய்ய” சீன ஜனாதிபதி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,
000
Related posts:
வாகனங்களில் எதிரொளிப்பான் பொருத்தி விபத்துக்களைத் தவிர்க்கவும்: யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை - மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப...
|
|
|
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது - தொற்று நோயியல...
2 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் வ...


