சீனாவில் நிலச்சரிவில் – 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி !
Sunday, February 9th, 2025
சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
“காணாமல் போனவர்களைத் தேடி மீட்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும், அதன் பின்விளைவுகளை முறையாகக் கையாளவும் முடிந்த அனைத்தையும் செய்ய” சீன ஜனாதிபதி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,
000
Related posts:
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ !
கொரோனா வைரஸ்: இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்!
2027 ஆம் ஆண்டுமுதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
|
|
|


