கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ !
Saturday, September 17th, 2016
கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாகவும், இதனால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த தீயணைப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மானிப்பாயில் எட்டு மில்லியன் ரூபாய் செலவில் நவீன மீன் சந்தை
நெடுந்தீவிற்கு உலங்குவானூர்தி மூலம் வினாத்தாள்கள்!
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...
|
|