சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – பொன்சேகாவின் சவால் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!
Monday, September 25th, 2023சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள சவால் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் என்ன சவால் விடுத்தார்?. மூன்று, நான்கு மாத குழந்தைகள் உடல் முழுவதும் அழுக்காக்கி கொள்ளும். சரத் பொன்சேகாவும் அதேபோன்றே வேலையை செய்கிறார். எவராவது அவரை கழுவி விடுவார்கள். எமது பலம் உறுதியானது.
நாங்கள் எமது அரசாங்கம் ஒன்றை அமைப்போம், அதில் அது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ...
|
|