குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை!

Tuesday, December 24th, 2024

பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 மூச்சு பகுப்பாய்விகள் (Breath Analyzers) விநியோகிக்கப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் இன்று (24) பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts:


பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி - 50 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகிய...
இது பொது முடக்கம் அல்ல – ஆனாலும் ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் - சுற்றுலாத்துறை அமைச்ச...
முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது காங்கேசன்துறை துறைமுகம் - 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி...