உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

Monday, March 17th, 2025

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கடந்த 3 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

000

Related posts: