நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!
Tuesday, May 29th, 2018
தற்போதுள்ள காலநிலை சீரின்மையை அடுத்து எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும்போது பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர் அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின்னர் வீடுகளுக்குச் செல்லுமாறும் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் வீடுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக 011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாறிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
இந்து சமுத்திரத்தில் சுதந்திர கடற்போக்குவரத்து மாநாட்டுக்கு தயார் - பிரதமர்!
மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் - பொதுமக்களுக்கு விவசாய அமைச்ச...
அமைச்சர் அலி சப்ரி - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் விசேட கலந்துரையாடல் - இலங்கையில் முதலீட்டுக்கான ...
|
|
|
புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் - தேசிய டெங்க...
டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் ...


