அஸ்வெசும நலன்புரிப் பட்டியலில் இருந்து 4 இலட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கம்!
Thursday, July 2nd, 2026
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், (30) அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்குடும்பங்களுக்கு மாதாந்தம் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வெசும பட்டியலில் இருந்த ‘இடைநிலை’ பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
000
Related posts:
முன்பள்ளி மாணவர்களது எண்ணக்கரு வளர்ச்சியை தடுக்கிறது - வலிகாமம் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் ...
சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை!
தேர்தல் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு - எதிர்வரும் திங்களன்று ந...
|
|
|


