அமரர் நிர்மலாவின் மனோகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, April 19th, 2026
காலஞ்சென்ற அமரர் நிர்மலா மனோகரனின்
பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மல மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
மானிப்பாய் பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான மனோகரனின் மனைவியான அமரர் நிர்மலா மனோகரன் கடந்த 16.04.2026 அன்று தனது 69 ஆவது வயதில் காலமானார்.
இன்நிலையில் ஆனைக்கோட்டை உயரப்புலத்தில்
உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்கா வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அமரரது குடும் உறவுகளுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) மற்றும் கட்சியின் பலர் கலந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


