அனைத்து இலகுரக வாகனங்களின்பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்றுமுதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!

Friday, August 1st, 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஓட்டுநரும், முன் இருக்கையில் பயணிப்போரும் ஆசனப் பட்டி அணிதல் அவசியம் என்பது நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில், வீதி விபத்துக்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு ௲ கட்டுநாயக்க நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் இந்த செயல்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

இந்த விதிமுறையைப் பின்பற்றாத ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சு எச்சரித்துள்ளது.

00

Related posts:


மத்தியிலிருந்து  தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாகத்  தரப்படுகின்றனவாம்: சொல்கிறார் வடக்க...
பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - வேலணை பிரதேச சபை தவிசா...
எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் - ஜனாதி...