48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம்!

Wednesday, September 20th, 2017

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடருந்து கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த போரட்டம் மேற்கொள்ளப்படவுள்ளன.இது தொடர்பில் வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்தை வெற்றியளிக்கவில்லை. எவ்வாறாயினும் இன்றையதினம் பிரதமரோ அல்லது ஜனாதிபதியின் செயலாளரோ தமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூல வாக்குறுதி அளிக்கும் பட்சத்தில், தமது போராட்டத்தை கைவிட முடியும் எனவும் குறித்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: