உறவினர்களிடையே மோதல்; அல்வாயில் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, April 20th, 2021

யாழ்ப்பாணம் வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்றகுழு மோதலில் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அல்வாய் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உறவினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வலுப்பெற்றுள்ளது. இதன்போது, கூரான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: