பளையில் விடுதிக்கு சீல் வைப்பு!

Friday, August 5th, 2016

பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்றுமாலை சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது –

பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பளைப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவு செய்யப்படாத விடுதிகள் இயங்கி வருவதாகவும் இந்த விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: